தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/இடைவிடா முயற்சி தேவை

இடைவிடா முயற்சி தேவை

இடைவிடா முயற்சி தேவை


ADDED : ஆக 10, 2012 09:08 AM

Google News

ADDED : ஆக 10, 2012 09:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உழைப்பில் தான் சுகம் இருக்கிறது என்ற உண்மையை உணர்ந்து கொண்டவர்கள் உழைக்கத் தயங்கமாட்டார்கள். உழைப்பை உயிரெனக் கொள்ளுங்கள்.

* கல்வி கற்கவும், ஆன்மிக வாழ்வில் ஈடுபடவும் வயது வரம்பு கிடையாது. ஆர்வமிருந்தால் எந்த பருவத்திலும் மேற்கொள்ளலாம்.

* மதிப்புடன் வாழ்பவனுக்கு நேரும் அவமானம் மரணதண்டனையை விடக் கொடியது.

* நீதிநெறி தவறாமல் பிறருக்கு உதவ நினைப்பவர் உயர்ந்தவர். மற்றவர் எல்லாம் தாழ்ந்தவர். இந்த இரு பாகுபாட்டைத் தவிர உலகில் வேறு பாகுபாடும் கிடையாது.

* கோபம் மனதைச் சூழ்ந்து கொண்டால், மனிதன் அறிவின் வழியில் செல்ல முடியாது.

* அச்சத்தினால் அன்பை விளைவிக்க முடியாது. அன்பினால் தான் அன்பை உருவாக்க முடியும்.

* சத்தியம் ஒன்று. அதனை ஆராதிக்கும் வழிமுறைகள் ஆயிரமாயிரம் உலகில் இருக்கின்றன.

* தெளிந்த அறிவும், இடைவிடாத முயற்சியும் ஒருவனுக்கு இருந்து விட்டால் அவனால் அடைய முடியாத குறிக்கோள் என்று எதுவுமில்லை.

- பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us